Monday, June 16, 2014

லண்டனில் பீடில் வாசிக்கும் ரிஸ்வி முப்தி : வீடியோ ஆதாரம்

இலங்கை நாட்டில் முஸ்லிம் பிரதேசங்கள் தீயில் எரியும் பொழுது, முஸ்லிம் உயிர்கள் கொலை செய்யப்படும் பொழுது, அகில இலங்கை ஜமியத்துல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தி என்கின்ற பச்சோந்தி லண்டனில் பீடில் வாசிப்பதற்கான ஆதாரம் இங்கே தரப்பட்டுள்ளது. இது குறித்து ஏற்கனவே வெளிடப்பட்ட செய்தியை சில குறுகிய புத்தியுள்ளவர்கள் பொய் என்று சொல்லி நிராகரித்து இருந்தனர். ஆகவே ஆதாரங்கள் முன்வைக்கப் படுகின்றன.

அரசாங்கத்துடன் மிக நெருக்கமாக செயற்படும் ரிஸ்வி முப்தி, அரசாங்கத் தேவைகளுக்கு ஏற்ப ஹலால் ஹராம்களை, பத்வாக்களை, முக்கியமாக பெருநாளை மாற்றிக் கொடுத்து உதவி செய்யும் ரிஸ்வி முப்தி, இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் நடைபெற ஏற்பாடாகி இருப்பதனை முன்கூட்டியே அறிந்திருந்ததன் காரணமாகவே, லண்டன் சென்று உல்லாசமாக பொழுதைக் கழித்து, தனது பொறுப்புக்களிலிருந்து தப்பி விட்டுள்ளார் என்கின்ற செய்தி, விஷயமறிந்த மெளலவிகள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.


ரோம் நகரம் தீப்பற்றி எறிந்த பொழுது நீரோ மன்னன் பீடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்று வரலாறு சொல்வது போன்று, இலங்கை முஸ்லிம்கள் தீக்கிரையாகும் பொழுது, ரிஸ்வி முப்தி லண்டனில் உல்லாசம் அனுபவித்துக் கொண்டு இருந்தார். அரசாங்க தேவைகளுக்காக ஜெனீவா, லண்டன், நிவ்யோர்க் போவதெல்லாம் ரிஸ்வி முப்திக்கு பழக்கப்பட்ட விடயங்களே.

ரிஸ்வி முப்தி தற்பொழுதும் லண்டனில் இருப்பதற்கான ஆதாரங்கள் இதோ.....


http://madawalanews.com/4291

http://www.youtube.com/watch?v=FjKvWs8zlq4

http://www.youtube.com/watch?v=FRFx1ZXlFZs


உண்மை தெளிவாக இவை போதும்....

4 comments:

  1. கிண்ணியாவில் பார்த்த பிறை குழப்பத்தை நிவர்த்தி செய்ய லண்டனுக்கு போய் வரும் வழியில் பார்த்துக் கொண்டு வருவார் என்று நம்புவோம்.

    ReplyDelete
  2. Dnt wright like this. .. this is our problems. .. 1st do masura ..... some time raving mum tling one good.. Allah knw all

    ReplyDelete
  3. We shouldn't be with them muslim leaders useless they are represented by politicians.

    ReplyDelete
  4. Always Dont search about others . In the situation he is there, thats not a mistake. bull shits.

    ReplyDelete