Tuesday, September 9, 2014

PJ நலம் - Video, அகோரி மணிகண்டனுக்கு சம்பளம் 5 லட்சம் - அனைத்துமே நாடகமா?


ஐம்பது லட்சம் ரூபாய் பெறுமதியான சூனிய சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ள PJ சுகவீனமடைந்துள்ளதாகவும், அதனை TNTJ இரகசியமாக வைத்துள்ளதாகவும் வெளியாகிய செய்திகளைத் தொடர்ந்து, தற்பொழுது முதல் தடவையாக TNTJ வாயைத் திறந்துள்ளது.


PJ நலமாக இருப்பதாகக் காட்டும் விடியோ ஒன்றை TNTJ முதல் தடவையாக வெளியிட்டுள்ளது. சுப்பர் மார்கட் ஒன்றில் சூட்டிங் செய்யப்பட்டுள்ள வீடியோவில் பின்னணியில் பெண்கள், ஆண்கள் தெரிய, முன்னால் நிற்கும் PJ நாலு பக்கம் சுற்றிச் சுற்றி மாலைமலர் பத்திரிக்கை வாசிப்பதாக காட்டப்பட்டுள்ளது, எனினும் PJ யின் குரல் இந்த வீடியோவில் இடம்பெறவில்லை.

சூனிய சூதாட்டம் மற்றும் தற்பொழுது வெளியாகியுள்ள இருவேறுபட்ட செய்திகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னால் PJ விசுவாசியும், தற்பொழுது அவரை விட்டு விலகி உள்ளவருமான முக்கிய நபர் ஒருவர், மொத்தமான சூனிய நிகழ்வுகள் அனைத்தும் திட்டமிடப்பட்ட வெறும் நாடகமே என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தெரியவருவதாவது :


PJ தனது செல்வாக்கையும், ஈர்ப்பையும்  இழந்து, மக்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து வரும் நிலையில், அதனை மாற்றுவதற்காக சூனிய சவாலை விடுத்து, அகோரி மணிகண்டன் என்கின்ற பெயரில் ஒரு போலி சூனியக்காரனை 5 லட்சம் ரூபாய் செலவில் ஏற்பாடு செய்து ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.

அகோரி மணிகண்டன் உண்மையில் ஒரு சூனியக்காரனோ, மந்திரவாதியோ அல்ல, அகோரி என்கின்ற பெயர் கூட, மணிகண்டனுக்கு வழங்கப்பட்ட கொந்திராத்துப் பணம் 5 லட்சத்தின் பொழுது TNTJ மூலமாக இணைக்கப் பட்டது. அதற்கு முன்னர் இவனை யாரும் "அகோரி" என்கின்ற பெயரில் அறிந்திருக்கவே இல்லை.

சொந்த ஊரில் சில சிறிய குற்றச் செயல்களை செய்துவிட்டு, ஊரை விட்டு ஓடிச் சென்று சாமி வேடம் போட்டு ஏமாற்றி வந்த ஒருவனே இந்த மணிகண்டன் ஆவான்.

(
இந்த மணிகண்டன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சங்கிலியாண்ட புரத்திலுள்ள பிள்ளையார் கோவில் உண்டியலைத் திருடிவிட்டு தப்பியோ டிய வர்தான் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். - http://viduthalai.in/page-2/86545.html#ixzz3BZn9BCQW )

அவனுக்கு 5 லட்சம் ரூபாய் கூலியாக (Contract) கொடுத்து, போலியாக ஒரு சூனிய ஒப்பந்தம் போட்டு PJ மற்றும் TNTJ யினர் ஒரு பரபரப்பை உருவாக்கினார்கள். அதன் மூலம் அவர்கள் பற்றிய செய்திகள் ஊடகங்களில் மீண்டும் பரபரப்பாக வெளியாகும்படி பார்த்துக் கொண்டார்கள்.

எனினும் மக்கள் மத்தியில் இந்த விடயத்தில் ஆர்வம் குறைந்து வரவே, மீண்டும் பரபரப்பை உண்டாக்க வேண்டும், மக்கள் PJ குறித்து மீண்டும் பேச வேண்டும் என்பதற்காக, இவர்களே திட்டமிட்டு, PJ சுகவீனமடைந்துள்ளதாக ஒரு செய்தியை (வதந்தியை) திட்டமிட்டு வெளியிட்டனர். இதன் காரணமாக PJ யின் எதிரிகள் மத்தியில் பரப்பரப்பு பற்றிக் கொண்டது.

அவர்கள் நினைத்தபடி காரியம் நடக்கவே, மீண்டும் PJ யின் செல்வாக்கை உயர்த்தி, அவரை ஹீரோ ஆக கட்டவே தற்பொழுது இன்னொரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.


48 நாட்கள் முடிவில், கொள்கை, கோட்பாடு, மதம் என்று எதுவுமே இல்லாத உண்டியல் திருடன் மணிகண்டன் இஸ்லாத்தை ஏற்பது போன்றும், அதன் பின்னர் சில மாதங்கள் PJ யுடன் இணைந்து சூனியம் பொய் என்று பிரச்சாரம் செய்வது போன்றும் நாடகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் மீண்டும் மணிகண்டன் இரகசியமாக தனது பழைய வாழ்க்கைக்கே, விரும்பியபடி செல்ல முடியும். இப்படித்தான் இந்த நாடகம் போடப்பட்டுள்ளது. ஆக ஐந்து லட்சம் ரூபாய் செலவில், 50 லட்சத்திற்கு ஒரு விளம்பரம்.


இவை அனைத்தும் PJ நெருக்கமாக இருந்தவர் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்கள் ஆகும். எந்த ஒரு இயக்கமும் சார்பில்லாத நடுநிலை இணையத்தளம் என்கின்ற வகையில் இந்தத் தகவல்கள் அனைத்தும் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் PJ நலமாக இருப்பதாக TNTJ வெளியிட்டுள்ள வீடியோவும் இணைக்கப்படுகின்றது.






4 comments:

  1. இது ஒரு நாடகம் என்பது அண்ணனை தெரிந்த அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்த விடயம்தான். இந்த மாதிரி நாடகங்கள் போடுவதில் அண்ணனின் பார்டி ரொம்ப கெட்டிக் காரர்கள்.

    காஸாவில் யுத்தம் முடிந்ததும், ஆர்ப்பாட்டம் பண்ணிவிட்டு, ஜனாதிபதி தாங்கள் ஆர்ப்பாட்டம் பண்ணித்தான் காசு கொடுத்ததாக போஸ்டர் அடித்த SLTJ இனரின் நாடகம் அண்மைய உதாரணம்.

    ReplyDelete
  2. முஹம்மது அசாருதீன் ..... இங்கு பெயர் போட்டு செய்தி போட்டால் தனிப்ப்ட முறையில் தாக்கி கருத்து சொல்கின்றனர்.. எங்களைபோல் தைரியமாக பெயர் சொல்ல முடியாத கோமைகள் நிறையபேர் உள்ளனர்..

    அசாத் கனேதன்ன

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...

    குர்ஆன் ஹதீஸில் உள்ள சூனியத்தை வைத்த பந்தயம் கட்டி முடிச்சாச்சு..

    குர்ஆன் ஹதீஸ் இல்லை என்று சொல்லுகின்ற ஜோசியம் இப்போ பந்தயத்துல நிக்குது...

    அடுத்து...

    தனது அறிவுக்கு ஏற்றதாக இல்லை என்று ஏற்கனவே பலவற்றை மறுத்து, தற்போது எதை எதை மறுத்து, தன் சூனிய பேச்சால் மதி மயங்கிக் கிடக்கும் ஆட்டு மந்தைகளை தன்னைப் போல் இறை மறுப்பாளர்களாக மாற்றப் போகின்றாரோ (மரியாதை கொடுத்தாச்சு)!

    யா அல்லாஹ்...

    உன்னை ஈமான் கொண்ட இந்த சமுதாயத்தை முஸ்லிமாக மரணிக்க செய்வாயாக!

    வழி கெட்ட, வழி தவறிய தலைவர்களுக்கு நேர் வழியை கொடுப்பாயாக!

    அவர்கள் நேர்வழி பெறுவதற்கு வாய்ப்பில்லை என்றால் அவர்களை மட்டும் தண்டிப்பாயாக!

    ஆட்டு மந்தைகளாக அறிவில்லாமல் அவர்களை பின் தொடர்ந்து செல்லும் மக்களை நேர்வழி பெறுவதற்கு அருள் புரிவாயாக!

    ஆமீன்.

    ReplyDelete
  4. இஸ்லாத்தின் கொள்கைகளை உங்கள்முன் நிருபித்து காட்டிய இவர்கள் உங்களுக்கு ஏமற்றுபவர்களா துணிவிருந்தால் கேள்விகளை சந்திக்க தயாரா : உஸ்மான் அலி 15, பதிரிகுப்பம் கடலூர் தமிழ்நாடு இந்தியா ph:9698786524

    ReplyDelete