Sunday, March 25, 2018

மரீனா ரிபாயின் தாருன் நுஸ்ரா இழுத்து மூடப்பட்டது! நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!! அல்லாஹு அக்பர்!!!


19 அனாதை முஸ்லிம் சிறுமிகள் மூன்று வருடங்களாக தொடர்ச்சியாக கற்பழிப்பு, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட இடமான மரீனா ரிபாய் இற்கு சொந்தமான தாருன் நுஸ்ரா அனாதைகள் இல்லம் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் கடந்த வாரம் இழுத்து மூடப்பட்டுள்ளது, அல்லாஹு அக்பர். அல்லாஹு அக்பர். அல்லாஹு அக்பர்.


அல்லாஹ் அநியாயக் காரர்களுக்கு மறுமையில் நிச்சயம் தண்டனை கொடுப்பான், சில நேரங்களில் அந்த தண்டனையின் ஒரு பகுதியை இந்த உலகிலும் கொடுப்பான், அப்படியான ஒரு சந்தர்ப்பமாக அல்லாஹ்வின் தண்டனை அனாதை சிறுமிகளின் வாழ்க்கையோடு விளையாடியவர்களுக்கு இந்த உலகில் கிடைக்கும் என்பதற்கு சாட்சியாக அல்லாஹ் அத்தாட்சிகளை காட்டி இருக்கின்றான்.

தனது மகள் இந்தியாவில் காபிருடன் டிஸ்கோ டான்ஸ் ஆடி கிட்டாருடன் பாட்டுப் பாடி கூத்துப் போடும் பொழுது அதற்கு பணம் அனுப்பி உதவி செய்யும் மரீனா ரிபாய், முஸ்லிம் அனாதை சிறுமிகளை வைத்து வியாபாரம் செய்து, வெளிநாட்டு பணங்களை பெற்று கோடிஸ்வரியாக மாறியுள்ள மரீனா ரிபாய், அந்த சிறுமிகள் அவரது நெருங்கிய நண்பரான முளப்பார் என்பவரால் கற்பழிக்கப் பட்ட பொழுது, அதனை கண்டும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய விடயம் நீதிபதிக்கு புரிந்துள்ளது காரணமாகவே அனைத்து அனாதை சிறுமிகளையும் அங்கிருத்து வெளியேற்றி, தாருன் நுஸ்ராவை மூடிவிடும் கட்டளையை நீதிமன்றம் பிறப்பித்து இருக்கின்றது.

அநாதை சிறுமிகளின் வாழ்க்கையோடு விளையாடியவர்கள், அதற்கு ஒத்துழைப்பு கொடுத்தவர்கள், அதனை மூடி மறைத்தவர்கள், அனாதைகளை காட்டி பணம் பெற்று வயிறு வளர்த்தவர்கள் அனைவருக்கும் கடுமையான தண்டனைகள் கிடைக்க நாம் அனைவரும் அல்லாஹ்வை பிரார்த்திப்போமாக.

சத்தியம் வந்தது, அசத்தியம் அழிந்தது, அசத்தியம் நிச்சயம் அழிந்தே தீரும். (அல்குர்ஆன் 17:81)





No comments:

Post a Comment