Friday, June 26, 2015

உலமா சபையை நிராகரித்த மக்கள், பள்ளிவாசல் திறப்பு வெற்றிகரமாக நடைபெற்றது

 முட்டாள் முல்லாக்களின் மடத்தனம் குறித்துபொதுமக்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்து உள்ளதன் வெற்றிகரமான அறிகுறியே ஏறாவூரில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் திறந்து வைக்கப்பட்ட ஆற்றங்கரை முஹையத்தீன் ஜும்மா மஸ்ஜிதின் திறப்புவிழா நிகழ்வாகும். இத்திறப்பு விழாவின் மாபெரும் வெற்றியானது, அறிவீனமாக செயற்பட்ட உலமா சபைக்கும், பள்ளிவாசல்கள் சம்மேளனத்திற்கும் ஏற்பட்ட பாரிய தோல்வி ஆகும்.

ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தப் பள்ளிவாசல் அண்மையில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது. இந்த பள்ளிவாசல் கிறிஸ்தவ சேர்ச் போன்று இருப்பதாகக் கூறிய உள்ளூர் உலக்கை சபையும், பள்ளிவாசல்கள் சம்மேளனமும் இந்தப் பள்ளிவாசலையும், திறப்பு விழாவையும் புறக்கணிக்கும் படி மக்களைக் கேட்டு இருந்தன, எனினும் இந்தக் கோரிக்கையைப் புறக்கணித்து பெரும் திரளான மக்கள் இதில் கலந்து கொண்டனர்.

பென்ச் - கட்டு போன்ற அமைப்பு எதற்குப் பயன்படுகின்றது என்று புரிகின்றதா?
 எதிர்பாராத விதமாக பெருமளவு மக்கள் கலந்துகொண்டதால், பள்ளிவாசலில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டு, அதிகமானவர்கள் வெளியில் நின்றுகொண்டு இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதாக அறிய முடிகின்றது. திறப்புவிழாவை புறக்கணிக்கும் படி கட்டளை இட்டவர்களுக்கு இது மாபெரும் தோல்வி ஆகும்.

உலமா சபை பிழை விட்டாலும், மக்கள் உலமா சபையை புறக்கணிக்கத் தயங்க மாட்டார்கள் என்பதற்கு ஏறாவூர் மக்கள் சிறந்த ஒரு எடுத்துக் காட்டு ஆகும்.
புகைப்பட உதவி : மடவளை நியூஸ்
இதன் பிறகாவது முட்டாள் முல்லாக்கள் பாடம் படித்துக் கொள்ளட்டும். பொது மக்களை எப்பொழுதும் மடையர்கள் ஆக்க முடியாது என்பதை மெளலவிகளும் அவர்களின் சபைகளும் புரிந்து கொள்ளட்டும்.

ஏறாவூர் மக்களின் துணிச்சல் பாராட்டத் தக்கது.



மெளலவி லீலைகள் தொடரும்.....






No comments:

Post a Comment