Monday, October 27, 2014

SLTJ - தவ்ஹீத் இடையே புனிதப் போர், இருவர் காயம், ஒருவர் கைது, 3 பேரை போலிஸ் தேடுகின்றது

 எல்லோரும் வழிகேடு, நாம் தான் நேர்வழி, நாம் மட்டுமே தூய குர்ஆனையும், ஹதீசையும் பின்பற்றுகின்றோம், இவையல்லாத அனைத்தும் வழிகேடு, சுவர்க்கம் வேண்டுமா, எங்களுடன் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டு சில தசாப்தங்களுக்கு முன்னர் தமது பிரச்சார வேட்டையை ஆரம்பித்த தவ்ஹீத் குழுக்களின் பிரச்சாரம், தற்பொழுது ஆஹா ஓஹோ என்று ஒரே அமர்க்களமாக போலிஸ் ஸ்டேஷன் முதல் ஹொஸ்பிடல் வார்டுகள் வரை பரந்து விரிந்து வியாபித்துள்ளது.


வந்த நாள் முதல் இந்த நாள் வரை விவாதம், ஏச்சுப் பேச்சு, குற்றம் குறை, சண்டை, அடிதடி, வெட்டுக் குத்து, கொலை கொள்ளை, நிதி மோசடி, வெளிநாட்டுக் காசு வேட்டை என்று நேர்வழிப் பிரச்சாரக் கலாச்சாரத்தை அமோகமாக மேற்கொண்டு வரும் தவ்ஹீத் அமைப்புகள், ஆரம்பத்தில் தமது பிரச்சாரத் தாக்குதல்களை தரீக்கா அமைப்புகள் மீது ஆரம்பித்து, ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து அடுத்த கட்டமாக தப்லீக், ஜமாத்தே இஸ்லாமி என்று இலக்குகளை விரிவுபடுத்தி வந்தனர்.

தொடர்ந்தும் வருடக்கணக்கில் தரீக்கா, தப்லீக், ஜமாத்தே இஸ்லாமி ஆகியவற்றுடன் மட்டும் முட்டி மோதி சண்டை பிடித்து அலுத்துப் போய்விட்டதால், புதிய எதிரிகள் தேவைப்பட்டனர். எனினும் போதிய அளவில் புதிய எதிரிகள் கிடைக்காத காரணத்தால், மனமுடைந்து போனாலும், பிறவிக் குணத்தைக் கைவிட முடியாத நிலையில், தமக்கிடையிலே குழுக்களை அமைத்து மோதி வருகின்றனர்.

A,B,C,D என்று ஆளுக்கொரு TJ ஆரம்பித்து, அது மேலும் வளர்ச்சியடைந்து SLTJ, PJTJ, LBW TJ, LTTE TJ, BF TJ, HIV TJ என்று தொடர்ந்து சென்று, தொடர்ந்தும் TJ என்று பெயர் வைப்பதற்கு ABCD யில் போதிய எழுத்துக்கள் இல்லாத காரணத்தலோ என்னவோ அல் இஹ்சான், தாருல் அதர் போன்ற பெயர்களையும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையின் தென் மாகாணம், மாத்தறை மாவட்டத்தில் உள்ள வெலிகமை நகரில் அல் இஹ்ஸான் என்கின்ற பெயரில், முன்னாள் தரீக்கா - தப்லீக் முக்கியஸ்தரனான மெளலவி பத்ஹுல்ரஹ்மான் பாரி தலைமையில் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பொன்றும், மதரஸா ஒன்றும் செயற்பட்டு வருகின்றன.

தாக்குதல் நடைபெற்ற மஸ்ஜிதுல் இஹ்ஸான் உட்புறத் தோற்றம்
இந்த அமைப்பின் நிர்வாகத்தில் உள்ள பள்ளிவாசலிலேயே அடிதடி மோதல் ஆடம்பரமாக நடைபெற்றுள்ளது. நேற்று ஞாயிற்றுக் கிழமை (26.10.2014) விடுமுறை தினமாக இருந்ததால், தவ்ஹீத் ஜமாத்தினர் விடுமுறை தினத்தை தமது மனதிற்கு பிடித்த விதமாக அடிதடி, ஏச்சுப் பேச்சு, திட்டு வசைபாடலுடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் இற்கு அட்டோவில் வந்த SLTJ குழுவினருக்கும், பள்ளிவாசலில் இருந்த பேஷ் இமாம் மெளலவி முஹம்மத் அவர்களுக்கும் இடையிலேயே இந்த புனிதப் போர் இடம்பெற்றுள்ளது.

ஆட்டோவில் வந்த SLTJ முஜாஹித் சிங்கங்கள் கல்லுகள், தடிகள், போத்தல்கள் கொண்டு தமது ஜிஹாத் போராட்டத்தை, கொடிய எதிரிகளிடமிருந்து இஸ்லாத்தை பாதுகாப்பதற்காக ஆரம்பித்துள்ளனர்.

அல்லாஹ்வின் பாதையில் நடைபெற்ற புனிதப் போரில், இஸ்லாத்தை பாதுகாக்கக் வீரத்துடன் போராடிய மெளலவி முஹம்மத் காயமடைந்து மாத்தறை ஆதர வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். (இந்த வார்த்தைகள் நக்கல் என்று நினைப்பவர்கள் அப்படியே நினைத்துக் கொள்ளலாம்.)


SLTJ யினரின் ஜிஹாத் தாக்குதலில் காயமடைந்து மாத்தறை பேஷ் ஹொஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ள பேஷ் இமாம்
முகம்மத் மெளலவி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டதைத் தொடர்ந்து, SLTJ ஜிஹாத் படைகளின் தளபதியாக செயல்பட்ட வெலிகமை SLTJ பொருளாளர் மஸீன் அவர்கள் போலிஸ் இல் இருந்து தப்புவதற்காக, தனது காதுக்குப் பக்கத்தில் நுளம்பு கடித்ததால் ஏற்பட்ட காயத்திற்கு ஒரு பெரிய பிளஸ்டரை ஒட்டிக் கொண்டு வைத்தியசாலைக் கட்டிலில் ஓசியில்படுத்து என்ஜோய் பண்ணுகின்றார்.

நுளம்பு கடித்த இடத்தில் போடப்பட்டுள்ள பிளாஸ்டர்
 எனினும் போலீஸில் செய்யப்பட முறைப்பாட்டத் தொடர்ந்து SLTJ தீவிர உறுப்பினரான ரியாஸ் கைது செய்யப்பட்டு கம்பி எண்ணுகின்றார். மேலும் ரிமாஸ், நஜீப், மஸீன் ஆகிய SLTJ வினருக்கு எதிராக போலிஸ் பிடியாணை பிறப்பித்துள்ளது.

இவர்களில் ரிமாஸ், நஜிப் ஆகியோர் தலைமறைவாகியுள்ள நிலையில், மஸீன் நுளம்புக்கடிக்காக வைத்தியசாலைக் கட்டிலில் படுத்துகொண்டு நேர்ஸ்மாருக்கு ஜொள்ளு விட்டு வருகின்றார்.
வைத்தியசாலைக் கட்டிலில் உல்லாசமாக பொழுதைக் கழிக்கும் வெலிகமை SLTJ யின் "காலித் இப்னு வலீத்" என்று அழைக்கப்படும் மஸீன்

மெளலவி லீலைகள் தொடரும்.


6 comments:

  1. சொந்த சமூகத்தின் மீதே பாயும் இந்த கொலைவெறியை வன்மையாக கண்டிக்கிறேன். இன்று தௌஹீத் ஜமாத்து பல பிரிவுகளாக பிரிந்துள்ளதை வெளிப்படையாக காண்கிறோம். மாவனல்லையிலும் இந்த தாக்கம் வெளிப்பட தொடங்கியுள்ளது. இது ஆரோக்கியமல்ல.

    SLTJ சொல்பேச்சிற்கே நீதிமன்றம் சென்று மன்னிப்பு கேட்க நேர்ந்ததை மறந்திருக்காது.
    சரியோ பிழையோ ஒரு முஸ்லிம் தாக்கப்பட்டுள்ளார். SLTJ பெரும் மனதுடன் முன்வந்து தனது செயலுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்டு முன்மாதிரியாக திகழும் என நம்புகிறேன்.


    அசாத் கனேதன்ன

    ReplyDelete
    Replies
    1. ஊருக்கு ஒற்றுமை சொல்லி கொடுக்க முதல் சொந்த குடும்பத்தில் ஒற்றுமையாக இருக்கவும்

      Delete
  2. சகோதரா...
    இறைவன் இந்த இயக்க வெறியர்களுக்கு நல்ல மன பக்குவத்தயும் அழகிய நடத்தயயும் தரட்டும் ......

    இந்த சண்டைக்கு என்ன காரணம் ? எதனால் இந்த குத்து வெட்டு வந்தது என்று விபரமாக பக்க சார்பு இல்லாமல் தெரிவியுங்கள் ..... அப்போதுதான் எமக்கும் சரியாக விளங்கும் ...

    ReplyDelete
    Replies
    1. மிகவும் சரி. சண்டைக்கான காரணத்தை அட;மின் விளக்கினால் நல்லது

      Delete
  3. அவர்கள் குர்ஆன், ஹதீஸை பின்பற்றுபவர்கள். அவர்களைக் குறை கூறுவது குர்ஆன், ஹதீஸை குறை கூறுவது போன்றாகும்.

    ReplyDelete
  4. they are the people in right path........ others are disbelievers in their concept.... it is akind of holy war them....... they are not spreading Quran and Sunnah...... they spreading their own believes and concepts....... they have the quality of
    persistence...... until they overcome from that ..... no one can not give right path for them

    ReplyDelete