Monday, March 24, 2014

மஹியங்கனை ஜனாஸாவில் புனிதப் போர், மையவாடியில் தாக்குதல்



முஸ்லிம் சமூகத்திற்கு பிடித்திருக்கும் தரித்திரம் - முஸீபத் என்பவற்றிற்கு முக்கிய காரணம் யார் என்பதை தொடர்ந்து ஆதாரங்களுடன் முன்வைத்தும், பலபேர் அதனை உணர தவறியுள்ளனர். அதனை மீண்டும் நிரூபிக்கும் ஒரு கேவலமான சம்பவம் மஹியங்கனையில் ஒரு ஜனாஸாவின் பொழுது இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் உள்ள மஹியங்கனை, பங்கராகம என்கின்ற ஊரில் ஒரு ஜனாஸா அடக்கம் செய்யப்பட பின்னர், ஒரு மெளலவி பயான் செய்திருக்கின்றார், அப்பொழுது இன்னொரு இயக்கத்தை சேர்ந்தவர்கள் அவரை தடுத்ததுடன், ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்ய, வாக்குவாதம் கைகலப்பாக மாறி மையவாடியில் இடம்பெற்ற புனிதப் போரில் பலத்த காயமடைந்த 3 பேர் மஹியங்கனை அரசாங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இது கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் மஹியங்கனையில் ஒரு பள்ளிவாசல் மீது பெளத்த இனவெறியர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட பொழுது, மையவாடியில் ஜிஹாத் செய்யும் இந்த போர் வீரர்கள் எங்கே இருந்தார்கள்? இறுதியில் குறித்த பள்ளிவாசல் நிரந்தரமாக மூடப் பட்டது. அதற்காக துணிந்து போராட ஒரு வீரனும் முன்வரவில்லை, ஆனால் ஜனாஸாவில் வைத்து மையவாடியில் மெளத்தாப்போன வீரத்தைக் காட்ட புறப்பட்டு விட்டனர் முஜாஹித்கள்.

இதற்கெல்லாம் காரணம் யார்? உண்மையில் இதற்கான காரணம் இயக்கங்களும், மெளலவி பூசாரிகளுமே தவிர வேறு யாருமல்ல.


ஒவ்வொரு இயக்கங்களும் கோடிக்கணக்கான ரூபாய்கள் வருமானமுள்ள நிதி நிறுவனங்கள். அதன் தலைவர்களும், முக்கிய புள்ளிகளும் கோடிக்கணக்கில் பினாமி பெயர்களில் அசையாச் சொத்துக்களை சேர்ப்பதில் கில்லாடிகள். ஆனால் முஸ்லிம் சமூகமோ மூளையற்ற மடையர்கள் போன்று, கண்ணற்ற குருடர்கள் போன்று போன்று இவர்களின் பின்னால் ஜன்னத்துல் பிர்தவ்ஸை தேடுகின்றது. கிடைக்குமா சுவர்க்கம்?????


7 வருடங்கள் மதரசாவில் தண்டச் சோறு தின்று, மாங்காய்க் கொட்டை சூப்பிய இந்த முட்டாள் பூசாரிகளுக்கு, ஒரு ஜனாஸாவை எப்படி நல்லடக்கம் செய்வது என்பதே ஒழுங்காக தெரியாத நிலையில், இவர்களுக்கு என்னதான் உருப்படியாக தெரியும்? இவர்களா உங்களுக்கு ஜன்னத்துல் பிர்தவ்ஸிற்கு வழிகாட்டப் போகின்றார்கள்????

ஒரு மையத்தை எப்படி நல்லடக்கம் செய்வது, சுபஹு தொழுகையில் குனூத் ஓத வேண்டுமா, பெருநாள் எப்பொழுது என்பது போன்ற சாதாரண விடயங்களில் கூட ஒருமித்த கருத்தில் வரமுடியாத சுயநல பூசாரி மெளலவிகளை, மார்க்கத்தை - இல்மை சுமந்தவர்கள் என்று இன்னும் எத்தனை காலத்திற்கு நம்பி ஏமாறப் போகின்றீர்கள்???

9 comments:

  1. இந்த வீரர்களில் சிலரை மாவனல்லை அனுப்பி வைக்க முடியுமா.... கடந்த சனிக்கிழமை இவர்களின் உதவி இருந்தால் புனித யுத்தம் நடந்திருக்கும்..

    ReplyDelete
  2. எப்படியும் மாவனல்லைய காப்பாத்த அடுத்த ஊர்காரன்கள் தான் வரவேணும். அவன்கள்ட சண்டையே பெரிய சண்டை...
    கட்டார் டுவர் நல்லமோ...

    ReplyDelete
    Replies
    1. எங்கட மாவனல்ல கட்டுகோப்பான வாலிபகளை கொண்ட ஒழுக்கமான சமுதாயம் உள்ள முஸ்லிம் உம்மாவுக்கு முன்னூதாரனமாக ஊர்...அது பத்திய பொறாமை கொண்டவர்களே விமர்சிக்கின்றனர். மாவனல்லையின் சிறப்பை கெடுக்க முடியாது.

      அசாத்

      Delete
    2. திரு அசாத் அவர்களே..
      இந்த சைட்டிலும் இன்னும் சில சைட்களிலும் தாங்கள் மாவனல்லை மற்றும் இன்னும் சில விடயங்களுக்காக குரல் கொடுப்பதை அவதானிக்க முடிந்தது. உங்களின் அடையாளத்தை சரியாக வெளிப்படுதலாம் அல்லவா...

      Delete
    3. மாவனல்லையின் கட்டுக்கோப்பு நல்ல வெளங்குது....

      4 ஆம் வகுப்பு மாணவனை 11 ஆம் வகுப்பு மாணவன் பாலியல் துஸ்பிரயோகம், ஒருவர் வைத்தியசாலையில், மத்தவர் ரிமாண்டில்..... அப்போ இது நடந்தது மாதம்பையிலா?

      கிரன்வ்ண்டிட்கு கிட்ட டீம் போட்டு பொடியன் புடிக்கும் வேலை செய்யும் பொழுது, பொறாமை கொண்டவர்கள் விமர்சிக்கின்றார்களா? அப்படியா? ஒங்க ஊர் பாவமே....

      இப்படிக்கு
      வந்தான் வரத்தான்.

      Delete
    4. இது ஆதாரம் இல்லாதா குற்றச் சாட்டு
      அசாத்

      Delete
  3. ஹஜ்ஜுல் அக்பரின் பணக்காரியின் காதல் கதை எழுதவும்.

    ReplyDelete
  4. நான் ஒரு சில சமூக தொண்டு பணிகளில் ஈட்படுபவன். இரத்ததானம் விதவைகளுக்கு சுயதொழைழில் போன்ற சில விடயங்களில் ஈடபடுபவன். எனது சேவைகளை குறிப்பிடுவது நோக்கம் இல்லை. நான் வீண் புகமை விஐம்பாதவன். எங்கள் ஊரின் முஸ்லிம் சமுதாயத்தின் புகழ் பரவ பாடுபட விரும்பகிறேன்.

    நான் அசாத் ஹாசிம்

    ReplyDelete
    Replies
    1. ஓய் அசாத் நானா எங்கட கெசிங் சரியென்டா நீங்க மாவனல்ல டவுனே இல்ல.. நீங்க சொன்ன விதத்தை பார்த்தாNலு விளங்குது உங்களுக்கு தற்புகழ்ச்சி விருப்பம் இல்ல என்டு...ஹிஹிஹி....

      நீங்க சொந்த தாத்தாவ இன்னொத்தனுக்கு கூட்டி குடுத்தவன் தானே

      Delete