Saturday, August 24, 2013

Breaking News : மதரஸா மாணவனை உஸ்தாத் தாக்கி வைத்தியசாலையில், புகைப்படமும் உள்ளது



மார்க்கம் சீரழிந்து போக முழுக் காரணமும் மெளலவி எனப்படும் புரோகிதர்கள் என்பதனை உறுதியாக கூறி வருகின்றோம். எல்லா இயக்கங்கள், பிரிவுகள், பள்ளியில் நடக்கும் சண்டைகள் என்று அனைத்திற்கும் காரணம் மெளலவி எனப்படும் பூசாரிகளே. எல்லா இயக்கங்களும் மெளலவிகளினாலேயே பிரிக்கப் பட்டுள்ளன. தற்பொழுது மதரஸா மாணவன் ஒருவனை உஸ்தாத் கடுமையாக தாக்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது.



மாணவர்களை பாலியல் ரீதியாக தன்னினச் சேர்க்கை செய்வதும், அடித்துத் துன்புறுத்துவதும், மாணவர்களிடம் சொல்லி Body மஸாஜ் எடுப்பதும் பல்வேறு மதரஸாக்களில் உஸ்தாத்மார் செய்யும் வேலை ஆகும். மாங்காய்க் கொட்டை சூப்பினவன் எல்லாம் மெளலவியாகவும், உஸ்தாத் ஆகவும் இருப்பதால்தான் இந்த கேவலமான நிலைமை.


இயக்கம் பெரிதா இஸ்லாம் பெரிதா என்று மெளலவிப் பூசாரிகளைக் கேட்டால், இயக்கத்திற்காக அடுத்தவனைக் கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள் பூசாரிகள்.


இதோ, தற்பொழுது கிடைத்துள்ள செய்தி ஒன்று.....  இதனை வாசித்தல் பூசாரிகள் எவ்வளவு கொலை வெறி பிடித்தவர்கள் என்பதனை அறிந்து கொள்ளலாம்.    



அறபிக்கல்லூரி ஆசிரியரால் தாக்கப்பட்டு மாணவன் வைத்தியசாலையில் அனுமதி;காத்தான்குடியில் சம்பவம்.

முஹம்மது நியாஸ்:
காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் இரண்டாம் வகுப்பு மாணவன் பாலமுனையைச் சேர்ந்த M.அதாவுல்லாஹ் நேற்றிரவு அக்கல்லூரியில் பயிற்றுவிக்கின்ற  பிரபல மார்க்க  அறிஞர் ஒருவரால் மிகவும் கடுமையான முறையில் தாக்கப்பட்டு உடலில் பல தழும்புகளுடன் ஆரயம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவ்விடயம் தொடர்பாக மாணவனின் குடும்பத்தினரால் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காத்தான்குடியின் அருகே அமைந்துள்ள பாலமுனை மஸ்ஜிதுல் அம்மார் பள்ளிவாயிலில் கடந்த ரமழான் மாதம் இரவுநேரத் தொழுகைகளை(தராவீஹ்) எட்டு ரக்அத்துக்களாக தொழுகை நடாத்தியமையை காரணமாகக் கூறியே மேற்படி மாணவன் குறித்த ஆசிரியரால் தாக்கப்பட்டுள்ளார்.
அதேநேரம் இம்மாணவன் கடந்த வருடம் காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் மூலம் மாலைதீவிலுள்ள பள்ளிவாயில் ஒன்றிற்கு ரமழான் மாத இரவுத்தொழுகை(தராவீஹ்) நடாத்துவதற்காக சென்று வந்தவர் என்பதும் மாலைதீவிலுள்ள பள்ளிவாயில்களில் இரவு நேரத் தொழுகைகள் (தராவீஹ்) எட்டு ரக் அத்துக்கள் மாத்திரமே அவர் தொழுவித்துள்ளார் என்பதும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.

(குறித்த உஸ்தாதின் (பூசாரியின்) பெயர் விபரம் கிடைக்கப் பெறவில்லை. கிடைத்தல் பகிரங்கப் படுத்துவோம். அத்துடன் உரியவர்கள் இதனை சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு முறைப்பாடு செய்யும்படி கேட்டுக் கொள்கின்றோம்.)




4 comments:

  1. assalamu alaikkum v.v.
    oru sila moulawimarkaltan ivvarana murayil natakkinranar
    atanal yalla moulawimarkalukkum iffadi kurram sumattakkootathu
    neegal ivvalovu kevalamha moulavimarai sittariddu kooruvatanal nalla moulavimarkal padikkappadukinranar . nan oru moulawi illai. pamara kudimagan. nan partta vahayil neengal kurram saikinravarkalai kurippittu kooralam . yallarayum sarntamatiri kooravendam

    ReplyDelete
  2. ivvarana jaahiliya ulamakal samoohathil irunthu viraddapadal vandum

    ReplyDelete
  3. nayawala markasil manawanondrukku adiththu kaathu kelamal ponathe athu theriyaathaa???

    ReplyDelete
    Replies
    1. இது எங்கே, எப்படி, ஏன் எப்பொழுது நடைபெற்றது என்கின்ற தகவல்களையும், பெயர் விபரங்களையும் வழங்கினால், உறுதி செய்த பின்னர் பிரசுரிப்போம். E mail : jamathgames@hotmail.com

      Delete