Friday, August 30, 2013

ஷியாக்களின் முஸ்தபா பல்கலைக் கழகத்தில் செக்ஸ், மாதவிடாய்த் தில்லுமுள்ளு



மெளலவி எனப்படும் மதகுரு பூசாரிகளால் இஸ்லாமும், முஸ்லிம் சமூகமும் பல்வேறு வழிகளில் பிரிக்கப்பட்டு, ஒற்றுமை குலைக்கப்பட்டு, சீரழிக்கப்பட்டு,பிரச்சினைகள் உருவாக்கப்பட்டு சமூகம் பலவீனப்படுத்தப்பட்டு அல்லாடும் இந்தச் சந்தர்ப்பத்தில் ஷியாக்கள் மிகவும் தந்திரமாக ஊடுருவி காமக் களியாட்டங்களைக் கூட அரங்கேற்றி வருகின்றனர்.




அந்த வகையில் இலங்கையில் ஊடுருவியுள்ள ஷியாக்களின் பல்கலைக் கழகம் ஒன்று கொழும்பில் இயங்கி வருகின்றது. எந்த இயக்கமோ, மெளலவிகளோ இது குறித்து கவனம் செலுத்தியதாக அறியவில்லை. இந்நிலையில் ஷியாக்களின் பல்கலைக் கழகம் என்று சொல்லப்படும் இடத்தில் நடக்கும் காமக் கூத்துக்கள் தொடர்பில் கிடைக்கப் பெற்ற வாசகர் ஆக்கம் இங்கே தரப்படுகின்றது.

 

மெளலவி பூசாரிகள்தான் திருந்தவில்லை, இதனைப் பார்த்து பிள்ளைகளை அனுப்பும் பெற்றோராவது திருந்தட்டும்.


( முக்கிய குறிப்பு : ட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாசிரியருக்கே சொந்தம், அவை "மெளலவி லீலைகள்" இணையத்தின் கருத்துக்களை பிரதீபலிக்க வேண்டியதில்லை. )

 

 

தில்லு முல்லு .........'முஸ்தபா பல்கலைக்கழக' தில்லு முல்லு..........






வாசகர் ஆக்கம் : அஹ்லுல் ஹுசைன்

தில்லு முல்லு .........'முஸ்தபா பல்கலைக்கழக' தில்லு முல்லு .....



 இலங்கை ஈரான் நாட்டு கலாசாரப் பிரிவினரின் நடவடிக்கைகளும், புதிதாக முளைத்திருக்கும் 'முஸ்தபா' பல்கலைக் கழக கல்லூரியினதும் நடவடிக்கைகள் கிட்டத்தட்ட இந்த அரச மரத்தைப் போலவே இலங்கை அஹ்லுல்பைத் ஆதரவாளர்களின் இஸ்லாமிய பணியினை சிதைத்து விடும் செயல் விளைவுகளுக்கு காரணமாக அமைந்துப் போக வாய்ப்பு இருக்கிறது.

இலங்கை முஸ்லிம் மாணவ மாணவியரின் எதிர்காலத்துக்கு உதவுகின்ற நோக்கில் 'முஸ்தபா பல்கலைக் கழகம்' தடபுடலாக ஆரம்பிக்கப் பட்ட செய்தி உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

ஆனால், அவர்களுக்கு இலங்கை முஸ்லிம் மாணவ,மாணவியரின் நலனில் கிஞ்சித்தும் அக்கறை இல்லாததை அவர்களது நடவடிக்கைகள் எடுத்து சொல்கின்றன.

அவர்களது ஆர்ப்பாட்டமான  ஆரம்பம் சுமார் பதினைந்து மாணவர்களையும் பதினைந்து மாணவியர்களையும் அந்தப் பல்கலைக்கழகத்தில் கொண்டு சேர்த்தது.

மாணவ மாணவியருக்கு விடுதி வசதியும் செய்துக் கொடுக்கப் பட்டது.

விடுதியில் மாணவர்கள் கீழ்த்தட்டிலும் மாணவியர் மேல்தட்டிலும் தங்க வைக்கப் பட்டனர்.

நெருப்பையும் பஞ்சியையும் அருகில் வைத்த கதையாக அது மாறிப் போனது.

விரிவுரையாளர்களின் முன்னிலையில் மிகக் கடுமையாக இஸ்லாமிய 'மகரம்' பேணப் பட்டது.

பெண்களுடன் ஆண்கள் கதைப்பது தடுக்கப் பட்டது.

ஆனால்,நமது மாணவ மாணவியரோ SMS மூலம் தகவல் பரிமாறி இஸ்லாமிய 'மகரம்'தொலைத்து கதைத்து தமது நட்பை வளர்த்துக் கொண்டனர்.

இரவு பத்து மணிக்குப் பிறகு ஆண் பெண் ஒன்று கூடி குசு குசுத்து மகிழ்ந்தனர்.

ஏனெனில்,அந்த விடுதியில் பெண் மாணவியரைக் கண்காணிக்க பெண் கண்காணிப்பாளர் என்று ஒருவர் இருக்க வில்லை.

ஆனால்,திருமணமாகி  குழந்தைக் குட்டிகள் கொண்ட மௌலவி ஒருவர் பொதுவான கண்காணிப்பாளராக இருந்திருக்கிறார்.

அந்த 'மாங்கா மடையரும்' ஜொள்ளு விட்ட நிலையில் இரவு பத்து மணிக்குப் பிறகு பெண்களுக்கு நல்லுபதேசம் புரிந்திருக்கிறார்.

அதுமட்டுமன்றி, பெண்களுக்கு ஏதாவது சுகவீனம் என்றால் இந்த 'மாங்கா மடையர்'தான் வைத்திய சாலைக்கும் அழைத்து செல்வாராம்.

இந்த இடத்திலும் இஸ்லாமிய மகரம் தூக்கி வீசப் பட்டிருக்கிறது.(மகரமும் மண்ணாங் கட்டியும்)

இலங்கை ஒரு பௌத்த நாடு.

இஸ்லாமிய மார்க்கம் போல கடுமையான கட்டுப் பாடுகளும் ஒழுக்க விழுமியங்களும் பௌத்த தர்மத்தில் இல்லை.

என்றாலும்,இலங்கையில் பெண்கள் வேலை செய்யுமிடத்தில் பெண் மேலாளர் ஒருவர் அல்லது LSO ஒருவரின் சேவை இலங்கையில் சட்ட ரீதியாக கட்டாயமாக்கப் பட்டிருக்கிறது.

ஏனெனில்,பெண்களின் அசௌவ்கரியங்களை ஒரு பெண்ணுக்கு இன்னுமொரு பெண்ணிடம்தான் வெளியிட முடியும்.

ஆனால், அஹ்ளுல்பைத்களின் நெறியினைப் போதிக்கும் மாகோன்னதமான பொறுப்பைக் கடமையாகக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்தில் 'மாங்கா மடையர்' ஒருவர் சுவாமி பிரேமானந்தா போல அல்லது சுவாமி நித்தியானந்தா போல ஜொள்ளு விட வாய்ப்பளிக்கப் பட்டு அனுமதிக்கப் பட்டிருக்கிறார்.


நம்முடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட முஸ்தபா பல்கலைக் கழக பணிப்பாளரிடமும் இந்தக் கதையை நாம்சொல்லியாகி விட்டது.

தவறு நடந்திருப்பதாக அவரே ஒத்துக் கொண்டார்.




( முக்கிய குறிப்பு : ட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாசிரியருக்கே சொந்தம், அவை "மெளலவி லீலைகள்" இணையத்தின் கருத்துக்களை பிரதீபலிக்க வேண்டியதில்லை. )

No comments:

Post a Comment